சபாநாயகர் கருவுக்கு விசேட கௌரவ விருது | தினகரன் வாரமஞ்சரி

சபாநாயகர் கருவுக்கு விசேட கௌரவ விருது

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு சாசன கீர்த்தி, தேசாபிமாணி விஷேட கௌரவ விருதை வழங்க மல்வத்தை பீட மகாநாயக்கர் தலைமையிலான மகா சங்கத்தினர் குழு தீர்மானித்துள்ளது.

இந்த கௌரவ விருது நாளை மறுதினம் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை மூன்று மணிக்கு கண்டி மல்வத்தை மகாவிகாரை விசேட மண்டபத்தில் வைத்து சபாநாயகருக்கு வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே ஸ்ரீலங்கா ராமன்ய நிக்காயாவின் சார்பில் விஸ்வகீர்த்தி ஸ்ரீலங்கா ஜனரஞ்ஜன விருதும், சார்ந்த தர்ஷி மக்கள்

தலைவர் என்ற விருதும் சபாநாயகருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜப்பானிய மன்னரால் வழங்கப்படும் சிறப்பு கௌரவமான உதிக்கும் சூரியன் (Rising sun) விருது கடந்த வருடத்தில் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா 2017இல் விஸ்வ சாம (உலக சமாதான) விருதை சபாநாயகர் கருஜயசூரியவுக்கு வழங்கியுள்ளது. சமீபத்தில் அப்துல் கலாம் விஞ்ஞானக் கல்வி நிறுவனம் ஆசியாவின் அபிமானம் (Pride of Asia) என்ற விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments