முகமது ஹபீஸ் பந்து வீச்சு மீது மீண்டும் புகார் | தினகரன் வாரமஞ்சரி

முகமது ஹபீஸ் பந்து வீச்சு மீது மீண்டும் புகார்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகலதுறைவீரர் முகமது ஹபீஸின் பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக கள நடுவர்கள், ஐ.சி.சி. போட்டி நடுவரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சகல துறைவீரர் 37 வயதான முகமது ஹபீஸ், சுழற்பந்து வீசக்கூடியவர். இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியின் போது அவர் 8 ஓவர்கள் பந்து வீசி 39 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

இந்த நிலையில் அவரது பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக கள நடுவர்கள், ஐ.சி.சி. போட்டி நடுவரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் அவர் 3-வது முறையாக இத்தகைய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அடுத்த 14 நாட்களில் ஹபீஸ் தனது பந்து வீச்சை பரிசோதனைக்குட்படுத்தியாக வேண்டும். அதுவரை அவர் தொடர்ந்து பந்துவிசலாம். 

Comments