Home » “ஆத்தங்கரை ஓரத்தில ” பாடலுக்கு விருது வென்ற பிரபாலினி

“ஆத்தங்கரை ஓரத்தில ” பாடலுக்கு விருது வென்ற பிரபாலினி

by Damith Pushpika
May 5, 2024 6:00 am 0 comment

நோர்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் பிரபாலினிக்கு விருது கிடைத்துள்ளது.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா காதலர் தினத்தன்று வெளியிட்ட “ஆத்தங்கரை ஓரத்தில” பாடல் மாபெரும் வெற்றி படைத்துள்ளது.

Youtubeஇல் 1மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்களால் பாராட்டப்பட்ட பாடல் இது.

பிரபாலினி பிரபாகரன் வெளியிட்ட Queen Cobra என்ற ஆடியோ ஆல்பம் தொகுப்பில் இருந்து வெளியான வீடியோ ஆல்பம் இது. முழுக்க முழுக்க இலங்கையில் படமாக்கப்பட்டது.

ஒரு இலங்கைப் பெண்ணான பிரபாலினி எழுதி, இசையமைத்து, பாடி, தயாரித்து, நடித்த பாடலும் இதுவாக மட்டுமே இருக்கிறது என்பதும் இந்தப்பாடலின் சாதனை தான்.

பிரபாலினி, ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி. பரமேஷ் மற்றும் சங்கீத பூஷணம் சிவமாலினி பரமேஷ் தம்பதிகளின் மூத்த மகளாவார். இலங்கையின் 1968களில் முதல் தமிழிசைத் தட்டை தனது காதலிக்காக “உனக்குத்தெரியுமா நான் உன்னை நினைப்பது” என்று எழுதி, இசையமைத்து, பாடி, தயாரித்து வெளியிட்ட மூத்த கலைஞர் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஷின் மகள் தான் இந்த பிரபாலினி பிரபாகரன். அவரது பெற்றோரின் வழியில் இலங்கையின் முதல் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர் ஆகின்றார் பிரபாலினி.

நோர்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் பிரபாலினிக்கு இந்த விருது கிடைத்துள்ளது. அவரை நாமும் வாழ்த்திப் பாராட்டுவோம்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division