சர்வகட்சி அரசாங்கத்தின் நோக்கம் அதுவே -ஜனாதிபதி
பாராளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி, நாட்டை கட்டியெழுப்பும் தீர்மானங்களை எடுப்பதே சர்வகட்சி அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் வியாழக்கிழமை பிற்பகல்...
ஜனாதிபதி அலுவலக பிரதம பிரதானி சாகல
உலக வங்கியுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் மற்றும் லிற்றோ நிறுவனத்தின் முயற்சியினால் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதற்கமைய வெகுவிரைவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு முழுமையாகக் குறைவடையும் என்று ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்க...
ஜனாதிபதியுடனான சந்திப்பில் அதாவுல்லா MP
சகல சமூகங்களதும் பாதுகாப்பு, இருப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவம் அரசியலமைப்பூடாக உறுதிப்படுத்தப்படும் வரை, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படக்கூடாதென தேசிய காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போதே, தேசிய காங்கிரஸ் தலைவர் இவ்வாறு...
திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் மட்டுமே
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அடுத்த வாரம் வியாழக்கிழமை 11ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமானதால் கல்வியமைச்சு மேற்படி தீர்மானத்தை...
லிற்றோ நிறுவன தலைவர் அறிவிப்பு
எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலைகள் குறைவடையும் என லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவிக்கையில்: பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலேயே இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார். அதேவேளை...