12
கருவண்டுகள் சாண வண்டுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இவை மண்ணை வளப்படுத்தும் உயிரினங்களில் மிகவும் முக்கியமானதாகும். விலங்குகளின் கழிவுகளை உருட்டிக் கொண்டு சென்று மண்ணுக்குள் புதைத்து துப்புரவு தொழிலையும் செய்கிறது. இந்த வண்டுகளில் 8600 வகை இனங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வண்டுகள் பகலில் தன்னுடைய பணியை செய்து விட்டு இரவில் மண்ணுக்குள் புதைந்துவிடும் தன்மை கொண்டது.