Home » நாளை உலகம் இருளில் மூழ்குமா?
சூரிய கிரகணம் 2024:

நாளை உலகம் இருளில் மூழ்குமா?

by Damith Pushpika
April 7, 2024 6:48 am 0 comment

2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை ஏப்ரல் 8 ஆம் திகதி தோன்றும். 2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இலங்கையில் தென்படாது. நாசாவின் கூற்றுப்படி, முழு சூரிய கிரகணம் வட அமெரிக்காவைக் கடந்து, மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடாவைக் கடந்து செல்லும். நாசாவின் கூற்றுப்படி, இது 2044 வரை அமெரிக்காவில் இருந்து தெரியும் கடைசி முழு சூரிய கிரகணமாக இருக்கும். இது தெற்கு பசிபிக் பெருங்கடலில் தொடங்கும்.

முழு சூரிய கிரகணத்திற்கு ஒரு நாள் முன்பு, சந்திரன் பூமியிலிருந்து 3,60,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். இது சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான மிக நெருக்கமான தூரம். எனவே, இது அருகாமையில் இருப்பதால் வழக்கத்தை விட வானத்தில் பெரியதாகத் தோன்றும் – இது சூரிய கிரகணத்திற்கு சரியான அமைப்பை உருவாக்கும் மற்றும் அழகான காட்சியையும் உருவாக்கும்.

வானிலை சீராக இருந்தால், வட அமெரிக்க கண்டத்தில் முழுமையாக சூரிய கிரகணத்தை அனுபவிக்கும் முதல் இடம் மெக்ஸிகோவின் பசுபிக் கடற்கரையாக இருக்கும். காலை 11:07 க்கு இது தென்படும். மெக்சிகோவுக்குப் பிறகு, அமெரிக்கா, ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ், மிசோரி, இல்லினொய்ஸ், கென்டக்கி, இந்தியானா, ஓஹியோ, பென்சில்வேனியா, நியூயார்க், வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் மைனே வழியாக பயணிக்கும். டென்னசி மற்றும் மிச்சிகனின் சிறிய பகுதிகளும் முழு சூரிய கிரகணத்தை அனுபவிக்கலாம். கிரகணம் தெற்கு ஒன்ராறியோவில் கனடாவுக்குள் நுழைந்து, கியூபெக், நியூ பிரன்சுவிக் பிரின்ஸ் எட்வர்ட் தீவு மற்றும் கேப் பிரெட்டன் வழியாக தொடரும்.

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சூரிய கிரகணத்தை பாரக்கக் கூடாது. சூரியனை நேரடியாகப் பார்ப்பது பாதுகாப்பானது அல்ல, மேலும் சூரிய கிரகணத்தை வெற்றுக் கண்ணால் பார்ப்பது தீங்கு விளைவிக்கும். எனவே, சூரிய பார்வைக்கான சிறப்பு கண் பாதுகாப்பு (வழக்கமான சன்கிளாஸ்களைப் போன்றது அல்ல)கண்ணாடியை அணிய வேண்டும். இருப்பினும், முழு சூரிய கிரகணம் மட்டுமே சூரிய கிரகணத்தின் ஒரே வகையாகும், அங்கு பார்வையாளர்கள் தங்கள் சூரிய பார்வை கண்ணாடிகளை சிறிது நேரத்தில் அகற்றலாம். சந்திரன் சூரியனை முற்றிலுமாக மறைக்கும் குறுகிய காலத்தில் இதைச் செய்யலாம்.

நாளை நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் நிலத்தில் இருந்து பார்ப்பார்கள். ஆனால் ஒரு சில அதிர்ஷ்டசாலி நாசா விமானக் குழுவினர் அதை மிக நெருக்கமாகப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

நாளை ஏப்ரல் 8 (திங்கட்கிழமை) வட அமெரிக்கா முழுவதும் முழு சூரிய கிரகணம் நிகழும். சுமார் 3.1 கோடி மக்களால் அதை கண்டுகளிக்க முடியும். இந்த நிகழ்வை கண்டுகளிப்பதற்காக பெரும் எண்ணிக்கையில் மக்கள் அங்கு பயணிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இவை அனைத்தும் மோசமான வானிலை காரணமாக நிறைவேறாமல் போகலாம். கடந்த 1999-ஆம் ஆகஸ்ட் மாதம் பிரிட்டனில் நிகழ்ந்த கிரகணத்தை பார்க்க முடியாமல் மேக கூட்டங்கள் மறைத்துவிட்டன என்பது நினைவுகூரத்தக்கது. எனவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் சராசரியாக 375 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் முழுச் சூரிய கிரகணத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால், அதற்கான சிறந்த வழிதான் என்ன?

நாசாவின் இரண்டு பிரத்தியேக WB-57 விமானங்களில் மெக்சிகோ கடற்கரையில் இருந்து பறக்க உள்ளன. தென்மேற்கிலிருந்து வடகிழக்கு வரை கிரகணத்தின் முழுமையான பாதையை அவர்கள் பின்தொடர்வார்கள்.

சந்திரன் சூரியனைக் கடக்கும்போது ஏழு நிமிடங்கள் அவர்கள் அதன் நிழலில் இருப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் தரையில் இருந்தால் அவர்கள் நான்கு நிமிடங்கள் மட்டுமே அதன் நிழலில் இருந்திருக்கமுடியும்.

சுமார் 50,000 அடி (15 கிமீ) உயரத்தில் பல உபகரணங்களுடன் அவர்கள் கிரகணத்தின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்வார்கள்.

“இது மிகுந்த உற்சாகம் தருகிறது” என்று இரண்டு விமானங்களில் ஒன்றின் சென்சார் உபகரண இயக்குனரான நாசா விமானி டோனி கேசி கூறுகிறார். “நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். இந்தப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கிரகணத்தின் நிழல் உங்களுக்கு முன்னே செல்லும் அந்தத் தருணத்தின் அனுபவத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்,” என்றார் அவர்.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருகின்ற போது சந்திரன் சூரிய ஒளியை முற்றிலும் மறைக்கும் வகையில் இருக்கும். ​​

இதன்போது, சந்திரன் முழு கிரகணத்தை உருவாக்கி, சூரியனின் முழு மேற்பரப்பையும் மறைக்கும். சந்திரனின் ஒளி பூமியின் மேற்பரப்பில் பயணிக்கும் சிறிய பகுதி முற்றிலும் இருட்டாகிறது.

இந்த நிகழ்வின் போது பூமியில் வசிக்கும் மக்கள் கிரகணத்தை ஓரளவு பார்க்க முடியும். இம்முறை மெக்சிகோவின் பசிபிக் கடற்கரை நகரமான மசாட்லானில் (Mazatlan) இருந்து கனடாவின் நியூஃபவுண்ட்லேண்டின் கிழக்கு கடற்கரை வரை உள்ள மக்கள் இதனை காண வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் குறித்த சூரிய கிரகணத்தினை இலங்கையில் காண முடியாது.

வானியல் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் இதுபற்றிக் கேட்டபோது, நாளை ஏப்ரல் 08 ஆம் திகதி நிகழவுள்ள முழு சூரிய கிரகணம் இலங்கையில் தெரியாது, அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவிற்கு மட்டுமே தெரியும் என்று கூறினார்.

சூரிய கிரகணத்தை இலங்கை வாழ் மக்கள் எப்போது காண முடியும்?

ஆகஸ்ட் 02, 2027 – பகுதி சூரிய கிரகணம்

ஜூலை 22, 2028 – பகுதி சூரிய கிரகணம்

மே 21, 2031 – ஒரு வளைய சூரிய கிரகணம்

ஏப்ரல் 11, 2070 – முழு சூரிய கிரகணம்,

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division