க.பொ.த. சாதாரணதர பரீட்சை நாளை (06) திங்கட்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 452,979 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். 387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,331 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இம்முறை 3,527 பரீட்சை நிலையங்களிலும் 535 ஒருங்கிணைப்பு நிலையங்களிலும் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், இரத்மலானை பார்வையற்றோர் கல்லூரி, தங்காலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் விசேட பரீட்சை நிலையங்கள் இயங்கவுள்ளன.
இந்த ஆண்டு 730 சிறப்பு தேவையுடைய பிள்ளைகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். பரீட்சை மோசடிகளை தடுப்பதற்காக விசேட நடைமுறையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.