Home » தராக்கி சிவராம், ரஜீவர்மனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்

தராக்கி சிவராம், ரஜீவர்மனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

by Damith Pushpika
April 28, 2024 9:00 am 0 comment

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராக்கி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவுதினம் நேற்று சனிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு ஊடகத்துறைக்காக இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு தமது அஞ்சலியை செலுத்தினர்.

ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் பாராளுமன்றத்துக்கருகில் சடலமாக மீட்கப்பட்டார்.

ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை, கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டாரென்பது குறிப்பிடத்தக்கது.

யாழ். விசேட, பருத்தித்துறை விசேட நிருபர்கள்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division