சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய கற்கைகள் நிலையத்தின் [Institute of South Asian Studies -(ISAS)] சிரேஷ்ட உறுப்பினராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரும் முன்னாள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரும் பாத்ஃபைண்டர் மன்றத்தின் ஸ்தாபகருமான மிலிந்த மொரகொடவுக்கு சிங்கப்பூரிலுள்ள Institute of South Asian Studies நிலையம் அண்மையில் இந்த நியமனத்தை வழங்கியுள்ளது.
ஆய்வு விடயங்களை கருத்திற்கொண்டு கடந்த 2004ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துடன் (National University of Singapore) இணைந்ததாக Institute of South Asian Studies நிலையம் உருவாக்கப்பட்டது. தென் கிழக்காசியா மற்றும் தெற்காசியாவுக்கிடையில் பலமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்புகளை பேணுவதுடன், தெற்காசியாவின் பொருளாதார, அரசியல் விடயங்களின் முக்கியத்துவங்களை பிரதிபலிக்கும் வகையில் Institute of South Asian Studies நிலையம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.