Home » தினகரன் தில்லைக்கு ஊடகதூது விருது

தினகரன் தில்லைக்கு ஊடகதூது விருது

வடமராட்சியில் பாராட்டு வைபவம்

by Damith Pushpika
April 7, 2024 6:00 am 0 comment

தினகரன் பத்திரிகையின் பிராந்திய ஊடகவியலாளரும் மூத்த ஊடகவியலாளருமான சின்னத்துரை தில்லைநாதன், ஊடகத் தூது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஊடகத் தூது மடல் இரண்டாவது வெளியீட்டு விழாவும் ‘ஊடகவியல் கற்போம்’ -தமிழ் கத்தோலிக்க செய்தி லங்கா இணைய யூரியூப் தள திறப்பு விழாவும் அண்மையில் யாழ். கொழும்புத்துறை பீச் றோட்டிலுள்ள பிசப் சவுந்தரம் மீடியா நிலையத்தில் நடைபெற்றது.

ஊடகத் தூது மடலின் பிரதம ஆசிரியர் அருட் கலாநிதி ரூபன் மரியாம்பிள்ளை அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, 50 ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் வடமராட்சியைச் சேர்ந்த ஊடகவியலாளர் தில்லைநாதன், ஊடகத் தூது மடலின் 2024ஆம் ஆண்டுக்கான ஊடகத் தூது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மூத்த ஊடகவியலாளரும் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான வீரகத்தி தனபாலசிங்கம், மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம், கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலை விரிவுரையாளர் வேல்நந்தகுமார், ஓய்வுநிலை ஆசிரியர் சாள்ஸ் அரியகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (மேலதிக விபரம் 21ஆம் பக்கத்தில்)

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division