இன்றைய சமூகத்தில் டியூஷன் வகுப்புகள் அத்தியவசியமானவையாகி விட்டன. தற்போதுள்ள போட்டித் தன்மையுள்ள பரீட்சை முறையால், வெற்றியில் கவனம் செலுத்தப்படுகிறது. உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளும் இன்று அதிக போட்டித் தன்மையுள்ள பரீட்சைகளாக மாறிவிட்டன.
இந்தச் சூழ்நிலையின் காரணத்தினால், பிரத்தியேக வகுப்பு என்பது இன்று மிகப்பெரிய தொழிலாக மாறிவிட்டது. பாடசாலை ஆசிரியர்களைப் போன்று அந்தந்த பாடங்களுக்கான நிபுணர்கள் உருவாகியுள்ளனர். இன்று அது அரசியலிலும் இணைந்துள்ளது. இன்று இது மிகப்பெரிய தொழிலாக மாறிவிட்டது. நமது கல்வி மற்றும் தேர்வு முறையில் காணப்படும் குறைபாடுகளால்தான் இந்த நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. திறமை அடிப்படையிலான கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முக்கிய கட்சிகள் தங்களுக்கு நன்மை பயக்கும் சூழலிலேயே செயல்படுகின்றன.
பெற்றோர்கள், மாணவர்கள் அனைவரும் இன்று டியூஷனுக்கு அடிமையாகிவிட்டனர். நடைமுறையில் அரசியல்வாதிகளால் மட்டும் இதை எதிர்க்க முடியாது. அன்று டியூஷன் முறையை எதிர்த்துப் பேசிய மக்கள் விடுதலை முன்னணியும் கூட இன்று அதற்கு ஆதரவாகப் பேசுகிறது.
எனினும் கல்வியின் தரத்தை உயர்த்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு முன்னிற்கும்.