29
இலங்கை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் அமீர் இஸ்மாயில் தனது 85ஆவது வயதில் நேற்று (20) நண்பகல் கொழும்பு, வெள்ளவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். இந்நிலையில் தெஹிவளை ஜும்மா பள்ளிவாசல் முஸ்லிம் மையவாடியில் இன்று (21) காலை இவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச முறைப்பாட்டு ஆணைக்குழுவின் ஆணையாளராகவும் இவர் கடமையாற்றியிருந்தார்.
சம்மாந்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், 03 ஆண் பிள்ளைகளின் தந்தையாவார். இவர் சம்மாந்துறையில் முதலாவது ஓய்வுபெற்ற நீர்ப்பாசன பொறியியலாளர் மர்ஹூம் எ.எல்.எம். இஸ்மாயிலின் புதல்வராவார்.
அட்டாளைச்சேனை குறூப் நிருபர்