Home » IMF நிறைவடையும்வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை

IMF நிறைவடையும்வரை தேர்தல் நடத்த வாய்ப்பில்லை

அமைச்சரவை, ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி அறிவிப்பு

by Damith Pushpika
March 31, 2024 6:00 am 0 comment

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும்வரை எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு வாய்ப்பில்லையென்று அமைச்சரவைக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

நாடு பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதெனவும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்த போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் ஜூலை இறுதிவரை அமுலிலுள்ளதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாதெனவும், ஜனாதிபதி தெரிவித்தார். அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான நேரம் நாணய நிதிய செயற்பாட்டின் பின்னரே வருகின்றது. எனவே ஜனாதிபதி தேர்தலை நடத்துவது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துக்கு இடையூறாக இருக்காதெனவும் அதற்கேற்ப தேர்தல் வரைபடத்தை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், ஜனாதிபதி தெரிவித்தார். ஆயினும், முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division