தரமற்ற இம்யூனோகுளோபிலின் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க, இது தொடர்பாக நீதிமன்றத்தில் தான் இரகசிய வாக்குமூலம் வழங்க விரும்புவதாக நேற்று (02) மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்கிரம வீரசிங்க முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 127 இன்படி, சந்தேக நபரிடம் நீதவான் இந்த அறிக்கையை சுயாதீனமாகவும் வெளிப்புற அழுத்தங்கள் இல்லாமல் வெளியிட ஒப்புக்கொள்கிறாரா? என்று கேட்டார்.
சந்தேகநபர் சமன் ரத்நாயக்கவின் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி காஞ்சன ரத்வத்த, தன்னிடம் தனது கட்சிக்காரர் அறிவித்ததன் அடிப்படையில் சந்தேகநபரை நாளை (04) நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறும் இந்த வாக்குமூலத்தை வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விடுத்து, இச்சந்தேகநபரை தனியாக தடுத்து வைக்க வேண்டுமென தெரிவித்த நீதவான், அவரை மஹர சிறைச்சாலையில் வைக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.
கடந்த 01ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இச்சம்பவம் தொடர்பாக இவரிடம் நடத்திய 11 மணிநேர விசாரணையின் பின்னர் சந்தேகநபரை கைது செய்து நேற்று நீதவான் முன்னலையில் ஆஜர்படுத்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.