Home » அக்கரைப்பற்று நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள்

அக்கரைப்பற்று நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள்

by Damith Pushpika
February 25, 2024 6:00 am 0 comment

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாகவும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமாக A,C.றிஸ்வான் கடந்த 2024.01.01 கடமையேற்றதன் பின்பு அக்கரைப்பற்று நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உருப்பெற்றுள்ளன.

நீதிமன்றின் நீண்ட காலமாக சேதமடைந்திருந்த வாகனத் தரிப்பிடம் சுமார் பத்து இலட்சம் ரூபா செலவில், புனரமைக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற, திறந்த நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கான, புதிய திரைச்சீலை வசதிகள், புதிய சிறைக்கூண்டு போன்றவையும், இலட்சக் கணக்கான ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று நீதிமன்ற நுழைவாயிலில், இதுகாறும் இருந்து வந்த பெயர்ப் பலகை அகற்றப்பட்டு, புத்தம் புதிய பெயர்ப் பலகை பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான நிதி வசதிகளை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் பிரதேச சபைகள் ஒதுக்கியிருந்தன.அக்கரைப்பற்று நீதிமன்ற வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடம் அக்கரைப்பற்று, மாவட்ட, நீதவான் நீதிமன்ற நீதிபதியான றிஸ்வானால் திறந்து வைக்கப்பட்ட அதேவேளையில், மேலதிக மாவட்ட நீதிபதியும், கௌரவ நீதிபதியுமாகிய திருமதி தெசீபா ரஜீவன் புதிய பெயர்ப்பலகையினை திரை நீக்கம் செய்து வைத்தார். அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்கள்,கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் றயிசுல் ஹாதி, நீதிமன்ற உத்தியோகத்தர்கள், சமூதாய சீர்திருத்த உத்தியோகத்தர்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division