ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நேற்று முன்தினமிரவு (17) நாடு திரும்பினார். விஜயத்தின் இறுதி நாளன்று சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வாங் சியாஹூவைச் சந்தித்தார் ஜனாதிபதி.
அதன் பின்னர், சீனாவின் சிச்சுவான், வெங்டூவிலுள்ள டெங்பேங் மின்சாரக் கூட்டுத்தாபனத்துக்கும் ஜனாதிபதி விஜயம் செய்தார்.
சீன விஜயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அடிமட்ட நிலையான அபிவிருத்தி மூலம் கிராமிய மறுமலர்ச்சியை நிரூபிக்கும் முன்மாதிரிக் கிராமமான சென் கி மாதிரி கிராமம், தேசிய விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் விவசாய நிலையத்துக்கும் விஜயம் செய்தார்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.