உழவு இயந்திரத்தில் சிக்கி சிறுவன் பலி! | தினகரன் வாரமஞ்சரி

உழவு இயந்திரத்தில் சிக்கி சிறுவன் பலி!

வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுக்குளம் பிரதேசத்தில் உழவு இயந்திரமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 வயதுச் சிறுவனொருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் (01) மாலை இடம்பெற்றது.

இப்பிரதேசத்திலுள்ள குளத்தின் அணைக்கட்டில் மணல் ஏற்றியவாறு பயணித்த இந்த உழவு இயந்திரமானது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த இந்தச் சிறுவன் படுகாயமடைந்து, பூவரசங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டான். இருப்பினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் மற்றுமொரு சிறுவன் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், வைத்தியசாலைத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments