சாஹித்திய ரத்னா விருது பெற்ற எழுத்தாளர் K.S. சிவகுமாரன் மறைவு | தினகரன் வாரமஞ்சரி

சாஹித்திய ரத்னா விருது பெற்ற எழுத்தாளர் K.S. சிவகுமாரன் மறைவு

சாஹித்திய ரத்னா விருது பெற்ற, வாழ்நாள் சாதனையாளரும் பன்முக திறமையாளருமான கே.எஸ்.சிவகுமாரன் தனது 86ஆவது வயதில் கொழும்பில் நேற்றுமுன்தினம் காலமானார். 

மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் கே.எஸ்.சிவகுமாரன், பத்தி எழுத்து, விமர்சனம், அறிவியல், மொழிபெயர்ப்பு, கலை – இலக்கியத் திறனாய்வு, வானொலி ஒலிபரப்பு உள்ளிட்ட துறைகளில் பன்முகத் திறமையாளராக திகழ்ந்தவராவார். 

அன்னாரது படைப்பில் 30தமிழ் நூல்களும், 02ஆங்கில நூல்களும் 02ஆங்கில மொழிக் கலைக்களஞ்சியங்களும் வெளியாகியுள்ளதாக கொழும்பு தமிழ் சங்கம் வெ ளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஓமான், மாலைத்தீவு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உயர்நிலை பாடசாலைகளில் ஆசிரியராகவும் அமரர் கே. எஸ்.சிவகுமாரன் பணியாற்றியுள்ளார். பல பட்டங்களைப் பெற்ற அமரர் கே. எஸ்.சிவகுமாரனுக்கு ஆறாவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

அன்னாரது மறைவுக்கு தினகரன் ஆசிரியர் பீடத்துடன் கொழும்பு தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் கூறும் நல்லுலகத்தின் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments