49
தேசிய மக்கள் சக்திமற்றும் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம் ஆகிய கட்சிகளின் அலுவலகம் நேற்று (04) சனிக்கிழமை பொகவந்தலாவ நகரில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த காரியாலய திறப்புவிழாவுக்கு தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர்கலான மஞ்சுல சுரவீர ஆராச்சி மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு காரியாலயத்தை மக்கள் பாவனைக்கு கையளித்தனர். இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட தேசிய மக்கள் சக்தியின் நோர்வூட் பிரதேச அமைப்பாளர் லலித், மற்றும் பெருந்திரலான மக்கள் கலந்து கொண்டனர்
பொகவந்தலாவ நிருபர்