Home » OrphanCare காப்பாளர்களில் ஒருவராக கஸ்தூரி செல்லராஜா வில்சன்

OrphanCare காப்பாளர்களில் ஒருவராக கஸ்தூரி செல்லராஜா வில்சன்

by Damith Pushpika
January 5, 2025 6:24 am 0 comment

புகழ்பெற்ற வர்த்தக பிரமுகரான கஸ்தூரி செல்லராஜா வில்சன், OrphanCare இன் காப்பாளர் சபை அங்கத்தவர்களில் ஒருவராக அண்மையில் இணைந்தார். அநாதரவான சிறுவர்கள் சிறுவர் பாதுகாப்பு இல்லங்களிலிருந்து வயது வந்த பருவத்தை எய்தும் நிலையில், தமது வாழ்வில் இரண்டாவது கைவிடப்படலை தவிர்த்துக் கொள்வதற்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்படும் திட்டமாக OrphanCare அமைந்துள்ளது.

சிறுவர்களுக்கான உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் 2ஆம் ஆக்கத்தை பின்பற்றி செயலாற்றும் OrphanCare இனால் சகல சிறுவர்களும் தமது இனம், மதம், நிறம் அல்லது தேசியம் ஆகிய பாகுபாடின்றி இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகின்றது.

ஐக்கிய அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் முன்னணி சக்தியூட்டும் பான வகையான 5-hour International Corporation இன் பிரதம செயற்பாட்டு அதிகாரியாக கஸ்தூரி தற்போது செயலாற்றுகின்றார். இலங்கையின் பொதுப் பட்டியலிடப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமொன்றில் நியமிக்கப்பட்ட முதலாவது பெண் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி எனும் கீர்த்தி நாமத்தை கஸ்தூரி பெற்றுள்ளார்.

2020 ஆம் ஆண்டில் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டிருந்ததுடன், 2024 மார்ச் மாதம் வரை இந்த நிலையில் அவர் தொடர்ந்திருந்தார்.

இவர் தற்போது இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் சபையில் அங்கம் வகிப்பதுடன், முன்னர் இலங்கை பணிப்பாளர் கல்வியம், CIMA ஸ்ரீ லங்கா மற்றும் இலங்கை அமெரிக்க வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றின் பணிப்பாளர் சபைகளிலும் அங்கம் வகித்திருந்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division