Home » கல்வியின் அவசியம்

கல்வியின் அவசியம்

by Damith Pushpika
March 3, 2024 6:13 am 0 comment

ஈழ நன்னாட்டில் இலவசக் கல்வி
இன்றும் தொடர்கிறது கல்வி கற்றிடல் அத்தியாவசியம்
பாலர் கல்வி முதல் பாடசாலைக் கல்வியின் பின்
பல்கலைக்கழகம் பயிற்சிக் கல்லூரிகள் சென்று
பயன்பாட்டைக் கருதிக் கல்வியைப் பெற்றிடுவோம்

தொழிற்பயிற்சி பெற்றிடலும் கல்வித் துறையில் உளதேயாம்
துறைபோகக் கற்றுத் தொழிற்பயிற்சி பெற்றிடின் வாழ்வில்
வெற்றி நிச்சயம்
பல்வேறு துறையில் பயிற்சி பெறப் பணமும் தேவை தான்
பற்றுடன் செலவுசெய்து பயிற்சி பெறல் அவசியமே
வாழ்வாங்கு வாழ்ந்திடற்குக் கல்வி வழி அமைக்கும்
வழிண்டு தேர்ச்சி பெறல் நமது சாதனையாம்

கல்வி முதல் நோக்கம் மனிதப் பண்பாடு வளர்த்தல்
கண்டுணர்ந்து நன்னெறியில் ஊன்றி நிற்றல் அவசியம்
சமூக ஐக்கியம் கருதி உயர்வு தாழ்வற்ற சமநிலை பேணி
சமய நெறிகளைப் பின்பற்றி நின்றிடின் நம்மால்
சகஜமான நல்வாழ்வை உறுதியாகக் கொள்ளல் ஆகும்

கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க
அதற்குத் தக என வள்ளுவரும் புகன்றுள்ளார்

கல்வியின் முக்கியத்துவம் அனைவரும் உணர்தல் அவசியம்
கல்வியின்றேல் வாழ்வு ஒழுங்காகச் சோபிக்காது
எழுத்தறிவு தான் கல்வி எனச் சிலர் கருதலாம்
எழுத்தறிவு கல்வியின் ஓர் அம்சம் எனக் கொள்ளலாம்.
முதல் அம்சம் மனிதனைப் பண்படுத்தல் கல்வியின் இலக்கு
முக்கியத்துவம் கொடுத்துப் படிமுறையில் கல்விநோக்கங்களை அறிந்து
முறையாகக் கற்றுத் தேர்ச்சி கானல் அவசியமாகும்
முழு மனிதனாக ஒருவனை உருவாக்கும் வல்லபம்
கல்விக்குத் தான் உண்டு.

வெலிப்பன்னை அத்தாஸ்...

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division