ஜனாதிபதி ரணில் இன்று எகிப்து நோக்கி பயணம் | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதி ரணில் இன்று எகிப்து நோக்கி பயணம்

எகிப்தில் ஷாம் எல் சீக் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 (Conference of the Parties) உலக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை எகிப்து பயணமானார்.

இந்த மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 07, 08 ஆம் திகதிகளில் உரையாற்றவுள்ளார்.

இலங்கையில் உருவாக்கப்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான செயலகம் தொடர்பாகவும் இலங்கை உட்பட சர்வதேச ரீதியிலான காலநிலை மாற்றம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரது உரையின்போது கருத்துக்களை முன்வைப்பார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எகிப்துக்கான விஜயத்தின் போது, எகிப்திய ஜனாதிபதி எப்டெல் பெட்டா சிஸி மற்றும் அந்நாட்டு பிரதமர் மொட்டாபா மெட்பௌலி ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

நான்கு தினங்களுக்கான விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி எதிர்வரும் 10 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments