உடல் ஆ​ரோக்கியம், வீதி நெரிசல் தவிர்ப்பு; வெள்ளிக்கிழமைகளில் துவிச்சக்கரவண்டி பயணம் | தினகரன் வாரமஞ்சரி

உடல் ஆ​ரோக்கியம், வீதி நெரிசல் தவிர்ப்பு; வெள்ளிக்கிழமைகளில் துவிச்சக்கரவண்டி பயணம்

உடல் ஆரோக்கியம் மற்றும் வீதிகளில் ஏற்படும் நெரிசல்களை தவிர்க்கும் வகையில் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் பிரதி வெள்ளிக்கிழமைகளில் துவிச்சக்கர வண்டிகளில் கடமைக்கு வரும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

உலக நகர தினத்தையிட்டு அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இதனை பின்பற்றும் வகையில் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

அதன்படி, நாளை 31ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இதற்கான திட்டம் நடைமுறையிலிருக்கும் என்றும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

அடுத்த வெள்ளிக்கிழமை இந்தத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன் அதனையடுத்து அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் துவிச்சக்கர வண்டியில் சேவைக்கு சமுகமளிக்கும் இந்த வேலைத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

பிரதான வீதிகளை பயன்படுத்தும் அதேவேளை, குறுக்கு வீதிகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கிலும் உடல் ஆரோக்கியம், வீதி நெரிசல்கள் ஆகியவற்றை தவிர்க்கும் ஒரு அம்சமாகவும் இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக மேற்படி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Comments