நூல் வெளியீட்டு விழா | தினகரன் வாரமஞ்சரி

நூல் வெளியீட்டு விழா

ஊடகஅனுசரணை தினகரன், தினகரன்வாரமஞ்சரி

லேக் ஹவுஸ், தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் ஊடக அனுசரணையுடன் எமது சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அலி தினகரனில் எழுதிய நேர்காணல் பத்திகளின் தொகுப்பான 'இளம் தலைமைத்துவ ஆளுமையும் சஹீட் எம். ரிஸ்மியுடனான நேர்காணலும்' எனும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 28ஆம் திகதி பி. ப 2.30மணிக்கு கொழும்பு - 3மென்டரினா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

அகில இலங்கை வை. எம். எம். ஏ பேரவையின் ஏற்பாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் நடைபெறும் நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் கலந்து கொள்கிறார். வரவேற்புரை, மற்றும் நூல் அறிமுக உரையை இர்பான் இக்பால் (சோனகர் கொம். ஆசிரியர் நிகழ்த்த ஆசியுரையை ரி. செந்தில்வேலவர், (பிரதம ஆசிரியர் தினகரன்) வழங்குவார்.

மாத்தளை எம். எம். பீர்முஹம்மது (மாத்தளை இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பேரவை. தலைவர்), ரவூப் ஹக்கீம் (தேசிய தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்), ரிசாட் பதியுதீன் (தேசிய தலைவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்)

என்.எம். அமீன் (முன்னாள் தலை வர் முஸ்லிம் மீடியா போரம்) ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர்.

ஏ. எம் நஹியா (முன்னாள் பணிப்பாளர் நாயகம், புனர்வாழ்வு மீனவர், வீடமைப்பு மீனவர் நலன்) கவிஞர் ரா. நித்தியானந்தன் (முன்ளாள் விரிவுரையாளர், அரசியல் விஞ்ஞானத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்) ஆகியோர் நூல் நயவுரையை வழங்குவர்.

நூலாசிரியர் உரையை இக்பால் அலி நிகழ்த்துவார். -சஹீட் எம். ரிஸ்மி (தேசியத் தலைவர், அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவை) ஏற்புரையாற்றுவார்.

நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் நாட்டின் உயர்ச்சிக்காகவும் மக்களின் மேம்பாட்டுக்காகவும் அர்ப்பணிப்போடு சேவையாற்றி வரும் மக்கள் நலன் பேணும் துறை சார்ந்த இளம் தலைமைத்துவங்களையும் ஊடகத் துறை சார்ந்தவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் உள்ளடங்கும்.

Comments