இலங்கையில் 40 வருடங்கள் கொண்டாடும் SOS கிராமங்கள் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் 40 வருடங்கள் கொண்டாடும் SOS கிராமங்கள்

தனது 40வருடகால சேவைப் பயணத்தின்போது, இலங்கை SOS சிறுவர் கிராமங்களினால், இலங்கை சமூகத்துக்கு பெருமளவு பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இதில் 12,000நேரடி அனுகூலம் பெறுவோரும், 50,000க்கும் அதிகமானோர் பல்வேறு சமூகத் திட்டங்களினூடாக நேர்த்தியான அனுகூலங்களையும் பெற்றுள்ளனர்.  

இந்த முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை குறிக்கும் வகையில், SOS சிறுவர் கிராமங்களினால் அண்மையில் 40ஆவது வருட பூர்த்தி கொண்டாட்டங்கள், பிலியந்தலையிலுள்ள SOS சிறுவர் கிராமத்தின் தேசிய பயிற்சி நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன்போது 40வருட பூர்த்தியை முன்னிட்டு ஞாபகார்த்த தபால் முத்திரை வெளியிடப்பட்டிருந்ததுடன், விசேட முதல்-நாள் மேலுறையும் தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியுடன், இலங்கை SOS சிறுவர் கிராமத்தின் பணிப்பாளர் சபையின் தலைவர் நந்தசிறி பொன்னம்பெரும, இலங்கை தபால்மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரட்ன, SOS சிறப்பு தூதுவர் ரொஷான் மஹாநாம, SOS சிறுவர் கிராமத்தின் தேசிய பணிப்பாளர் திவாகர் ரட்னதுரை ஆகியோருடன், SOS சிறுவர் கிராமத்தின் இதர அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர். 

SOS சிறுவர் கிராமத்தின் தேசிய பணிப்பாளர் திவாகர் ரட்னதுரை கருத்துத் தெரிவிக்கையில், “SOS சிறுவர் கிராமத்தைச் சேர்ந்த நாம், எமது 40 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த தபால் முத்திரையை வெளியிடுவதையிட்டு மிகவும் பெருமை கொள்கின்றோம். இந்த விசேட ஏற்பாட்டுக்காக தபால் திணைக்களம் மற்றும் தபால்மா அதிபர் ஆகியோருக்கு விசேடமாக நன்றி தெரிவிக்கின்றோம். ஒவ்வொரு பிள்ளையும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தது என்பதுடன், அன்பு, மதிப்பு மற்றும் பாதுகாப்பாக வளரவேண்டும் எனும் நோக்குடன் SOS சிறுவர் கிராமம் நிறுவப்பட்டது.  

Comments