சுகாதார துறையினருக்கு பெரும் சவாலான காலம்; 15 ஆயிரம் இருதய நோயாளர்கள் அறுவை சிகிச்சைக்கு காத்திருப்பு | தினகரன் வாரமஞ்சரி

சுகாதார துறையினருக்கு பெரும் சவாலான காலம்; 15 ஆயிரம் இருதய நோயாளர்கள் அறுவை சிகிச்சைக்கு காத்திருப்பு

இன்றைய நிலையில் நாட்டில் சுமார் 15,000இருதய நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கான காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்தார். 

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

எரிபொருள் நெருக்கடி காரணமாக, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரண பற்றாக்குறை, போஷாக்கான உணவு வகைகளை பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிரமங்கள் உள்ளிட்டவை காரணமாக நாட்டில் சுமார் 60 இலட்சம் பேர் மிகவும் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.  குழந்தைகளின் ஆரோக்கியம், கர்ப்பிணித் தாய்மார்களின் ஆரோக்கியம் மற்றும் போஷாக்கு, தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியம் பாரியளவில் மோசமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.   

Comments