காலி முகத்திடலிலுள்ள போராட்டக்காரர்களுடன் பிரதமர் நாளை பேச்சு | தினகரன் வாரமஞ்சரி

காலி முகத்திடலிலுள்ள போராட்டக்காரர்களுடன் பிரதமர் நாளை பேச்சு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை பதவி விலகுமாறு கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள காலிமுகத்திடல் போராட்டத்தின் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமாதானத்தை நாடியுள்ளார்.  அதன்படி நாளை திங்களன்று காலிமுகத்திடலின் சில பிரதிநிதிகளை பிரதமர் சந்திப்பாரென சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். 

நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் ஒரு போர் நிறுத்தத்தையும்,நேரத்தையும் தேடும் என்றும் அவர் கூறினார். இது குறித்து அமைச்சர் ஹரின் மேலும் கூறுகையில், 

காலிமுகத்திடல் போராட்டம் தொடரலாம், ஆனால் எதிர்ப்பாளர்களும் வந்து எங்களுடன் ஈடுபட வேண்டும், எனவே அவர்களும் இக் கலந்துரையாடலில் ஈடுபடவேண்டும்.

மேலும் பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களில் இரண்டு எதிர்ப்பாளர்களை இணைத்துக்கொள்ள பிரதமர் விரும்புவதாகவும் தெரிவித்த அவர், புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கி வருகிறோமெனத் தெரிவித்தார். 

இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு செல்லுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் கண்காணிப்புக் குழுக்களில் இணைவதன் மூலம், எதிர்ப்பாளர்களில் சிலர் இறுதியில் புதிய கட்சியை உருவாக்கலாமென்றும் அமைச்சர் ஹரின் மேலும் தெரிவித்தார்.

Comments