
சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை
சமகால நிலைமைக்கு அவசரகால நிலை தீர்வாகாதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் என்பன பொதுமக்களின் அடிப்படை உரிமைகளாகும்.
இந் நிலையில், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல் என்பனவற்றுக்கு அவசரகால நிலையை பயன்படுத்தக்கூடாதென்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே அவசரகால நிலை பிரகடனத்தை இரத்துச் செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.