அரசின் வடக்கு அபிவிருத்தி பணிகளில் TNAயின் ஒத்துழைப்புக்கு ஆளுநர் சார்ள்ஸ் பாராட்டு | தினகரன் வாரமஞ்சரி

அரசின் வடக்கு அபிவிருத்தி பணிகளில் TNAயின் ஒத்துழைப்புக்கு ஆளுநர் சார்ள்ஸ் பாராட்டு

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஒத்துழைப்பு கிடைப்பதாக வடமாகாண அளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் நாம் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களோடும் திணைக்களங்களுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்தவகையில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர்களில் ஒத்துழைப்பு நன்றாவே கிடைக்கின்றது என்பதை குறிப்பிட முடியும்.

உண்மையில் வடக்கில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றனர். மக்களுக்கான செயற்திட்டங்களில் அவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றனர் என்பதைக் குறிப்பிட வேண்டும். கிழக்கில் அவ்வாறான நிலை காணப்படவில்லயென்றும் அவர்தெரிவித்தார்.

வடமாகாண அளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் எமது தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.கொழும்பிலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ உபசெயலகத்தில் அவரைச் சந்தித்து உரையாடியபோது...

அவர் தெரிவித்த கருத்துக்கள் முழுமையான நேர்காணலாக 02 ஆம் பக்கம் பார்க்கலாம்..

கே.அசோக்குமார், லோரன்ஸ் செல்வநாயகம்

Comments