ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு நிறைவு நிகழ்வை எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் (26) இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின்
தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் 15ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.