உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சந்தேக நபர்; சஹ்ரானிடம் பயங்கரவாத பயிற்சி பெற்ற யுவதி கைது | தினகரன் வாரமஞ்சரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சந்தேக நபர்; சஹ்ரானிடம் பயங்கரவாத பயிற்சி பெற்ற யுவதி கைது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சந்தேக நபரான பயங்கரவாதி சஹ்ரானின் பயங்கரவாத பயிற்சி பாடசாலையில் பயிற்சி பெற்ற யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மாவனல்லை, ஹிங்குல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய இந்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதி சஹ்ரானினால் பெண்கள் சிலரை பயங்கரவாத செயற்பாட்டுக்கு இணைத்துக் கொள்வதற்காக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினால் 06 பெண்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Comments