இதமான குளிர்காற்று இன்னிசைப் பாட
காரிருள் கானமழை பொழிய
வெண்ணிலவோ வெஞ்சாமரம் வீச
உயிர்போகும் வரையிலும் மறவேன் - கண்ணா
உன் இதழ்தந்த பரிசங்கள்
உன் விரல் மீட்டும் வீணைதான் என்னுடல்
இந்த ஜென்மத்தில் உயிர்வாழ இதுபோதும்.
சண்முகநாதன் ஷ்யாம் தேவ், மாத்தளை.