2 நாளில் ரூ. 40 கோடி வசூலித்த 'மாஸ்டர்' | தினகரன் வாரமஞ்சரி

2 நாளில் ரூ. 40 கோடி வசூலித்த 'மாஸ்டர்'

விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் வசூல் குறித்த விபரங்கள் வெளியாகத் துவங்கியுள்ளது. இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 'மாஸ்டர்' எத்தனை கோடி வசூலித்துள்ளது என்பது தெரிந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக 13ம் திகதி ரிலீஸானது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க அதிகாலையிலேயே ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தார்கள்.

செல்போனில் டார்ச்லைட் அடித்து தியேட்டர் முன்பு கொண்டாடினார்கள். மாஸ்டர் படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டும் தான் என்று விமர்சனம் எழுந்தது. இது லோகேஷ் கனகராஜ் படமே இல்லை. விஜய்க்காக தன் ஸ்டைலை விட்டுக் கொடுத்துவிட்டார். முதல் பாதியை பார்த்து முடிப்பதற்குள்ளேயே கண்ணை கட்டிக் கொண்டு வருகிறது என்று மற்றவர்கள் விமர்சித்தனர்.

யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு 'மாஸ்டர்' ரொம்ப பிடித்துள்ளது என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் வசூல் விபரம் வெளியாகத் துவங்கியிருக்கிறது.

தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் ரூ. 20 கோடி வசூலித்துள்ளது மாஸ்டர். ஆனால் முதல் நாள் வசூலில் சர்காரை விட மாஸ்டர் குறைவாகத் தான் வசூலித்திருக்கிறது. விஜய்யின் சர்கார் படம் முதல் நாளில் மட்டும் தமிழகத்தில் ரூ. 35 கோடி வசூலித்தது. இரண்டு நாட்களில் ரூ. 40 கோடி வசூல் செய்திருக்கிறது.

தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ள நேரத்தில் ரூ. 40 கோடி வசூல் என்பது பெரிய சாதனை தான். 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைத்திருந்தால் மாஸ்டர் இதை விட அதிகம் வசூல் செய்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதே சமயம் பொங்கல் விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை வரை மாஸ்டர் வசூல் வேட்டை நடத்தும். மாஸ்டர் படத்தை பார்த்த அனைவரும் விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னதாக விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டபோது, ஏன் இந்த தேவையில்லாத வேலை என்றார்கள் ரசிகர்கள். ஆனால் படத்தை பார்த்த பிறகு விஜய் சேதுபதி எடுத்த முடிவு சரி தான் என்று தெரிவித்துள்ளனர்.

Comments