மீண்டும் காதலில் ஓவியா | தினகரன் வாரமஞ்சரி

மீண்டும் காதலில் ஓவியா

ஓவியா தான் ஒருவருக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ஆவலை தூண்டிவிட்டுள்ளார். அதை பார்த்த சிலர் இந்த ஆள் வேண்டாம் ஓவியா என்று கூறியுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பிரபலமாகலாம் என்பதை ஓவியாவை பார்த்து தான் பலரும் தெரிந்து கொண்டார்கள். சொல்லப் போனால் முதல் சீசனில் கலந்து கொண்ட ஓவியா அளவுக்கு வேறு எந்த போட்டியாளரும் பிரபலமாகவில்லை எனலாம். முதல் சீசனின்போது ஓவியாவுக்காக ட்விட்டரில் துவங்கப்பட்ட ஆர்மி இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் வீடு என்றாலே அங்கு ஒரு காதல் உருவாகியே ஆக வேண்டும் என்கிற விதிமுறை முதல் சீசனில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சீசனில் ஓவியா, ஆரவ் இடையே காதல் ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பிறகும் இருவரும் காதலை தொடர்ந்தார்கள்.

ஆரவும், ஓவியாவும் சேர்ந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றார்கள். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து ஓவியா ஆர்மியை சேர்ந்தவர்கள் சந்தோஷப்பட்டனர். ஆனால் பிக் பாஸ் வீட்டில் உருவாகும் காதல் முறிந்துவிடும் என்று சொல்லப்படும் நிலையில் ஆரவும், ஓவியாவும் பிரிந்துவிட்டனர்.

இதையடுத்து நடிகை ராஹீயை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஆரவ். அவருக்கும், ராஹீக்கும் திருமணம் என்று செய்திகள் வெளியானபோது அது வதந்தி என்றே ஓவியா ரசிகர்கள் நினைத்தார்கள். பின்னர் திருமண புகைப்படங்களை பார்த்து ஓவியாவை விட அவர்கள் தான் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் தான் ஒருவருக்கு முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு லவ் என்று தெரிவித்துள்ளார் ஓவியா.

அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் இவரையா காதலிக்கிறீர்கள் ஓவியா என்று கேட்டுள்ளனர். இந்த காதலாவது முறியாமல் இருக்கட்டும். ஆனால் அந்த ஆளை பார்த்தால் எங்களுக்கு நம்பிக்கையே வரவில்லை ஓவியா என ரசிகர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே ஓவியாவுடன் இருக்கும் நபர் முன்னதாக மீரா மிதுனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நெட்டிசன்கள் வெளியிடுள்ளனர். வேண்டாம் ஓவியா, காரா சேவுக்கு கண்ணாடி போட்ட மாதிரி இருக்கும் இந்த ஆள் உங்களுக்கு சரிபட்டு வர மாட்டார் என்று எச்சரித்துள்ளனர்.

Comments