தெரிவிக்குழு முன் சாட்சியமளிக்க பிரதமர் ரணில் விருப்பம் தெரிவிப்பு | தினகரன் வாரமஞ்சரி

தெரிவிக்குழு முன் சாட்சியமளிக்க பிரதமர் ரணில் விருப்பம் தெரிவிப்பு

தெரிவுக்குழு தீர்மானமில்லை

உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விரும்பம் வெளியிட்டுள்ளதாகப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முக்கிய உறுப்பினர் தெரிவித்தார்.  

அத்துடன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, முன்னாள் சட்டம், ஒழுங்கு அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க விரும்பம் வெளியிட்டுள்ளதாகவும் அவரிடம் அறிய முடிந்தது.  

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்புக்கான காரணிகளைக் கண்டறிய பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுகுழுவானது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள பலரிடம் சாட்சி மூலங்களை ப்பெற்றுள்ளது.  

பிரதானமாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி, காத்தான்டி ஓ.ஐ.சி உட்பட பலர் சாட்சியமளித்துள்ளனர். பிரதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட மற்றுமொரு முன்னாள் அமைச்சரான றிசாட் பதியுதீனிடம் மாத்திரம் இன்னமும் சாட்சியம் பெறப்படவில்லை.  

என்றாலும், பிரதமர் உள்ளிட்ட சாட்சியம் வழங்க விருப்பம் வெளியிட்டுள்ள அமைச்சர்களை பாராளுமன்றத் தெரிவுக்குழுக்கு அழைப்பது தொடர்பில் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை தெரிவுக்குழுக்கு அழைக்க ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் “தினகரன் வாரமஞ்சரி’க்கு உறுதிப்படுத்தினார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

Comments