பிரதமரின் உறுதிமொழிகள் செயல்வடிவமாக வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

பிரதமரின் உறுதிமொழிகள் செயல்வடிவமாக வேண்டும்!

இது பெப்ரவரி மாதம். உலக நாடுகள் பலவற்றில் போர் ஓய்ந்து சமாதானமும் சகவாழ்வும் ஏற்பட்ட மாதம். இலங்கையிலும்கூட பெப்ரவரிக்குப் பெரிய மரியாதை இருக்கிறது.

இந்த மாதத்தில்தான் இலங்கையில் சமாதானப் புறாக்கள் சகஜமாகப் பறந்தன. அரசாங்கத்திற்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, வடக்கிற்கும் தெற்கிற்கும் உறவுப் பாலமொன்று அமைய வழியேற்பட்டது. அப்போதைய அரசாங்கத்திலும் பிரதமராக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்க. என்னவோ, அவர் முன்னெடுத்த சமாதானப் பயணம் நீடிக்கவில்லை. அந்தக் காலத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது நாட்டு மக்கள், விசேடமாகத் தமிழ் மக்கள் அதீத நம்பிக்ைக வைத்திருந்தார்கள். நிலையான நீடித்து நிலைக்கக்கூடிய நிம்மதியான சமாதான வாழ்வு மலரும் என்று எதிர்பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்பு ஈடேறினாலும் இடைநடுவில் குலைந்துபோனது துரதிர்ஷ்டமே!

இப்போது மீண்டும் அந்த நம்பிக்ைக வட பகுதி மக்களுக்கு வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

வட மாகாணத்திற்கான தமது சூறாவளிப் பயணத்தின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய நம்பிக்ைகயை விதைத்திருக்கிறார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்த பிரதமர், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு மூன்று மாத காலத்தில் தீர்வைப்பெற்றுத்தருவதாக உறுதியளித்திருக்கிறார். இந்த உறுதிமொழி வடக்கு மக்கள் மத்தியில் நம்பிக்ைகயை ஏற்படுத்தியிருப்பதாகக் கள நிலைவரங்கள் மூலம் உணரக்கூடியதாக உள்ளது.

வடக்கு மக்களைப் பொறுத்தவரை போர் முடிந்து பத்தாண்டுகளைக் கடந்திருந்தாலும், அடிப்படை வாழ்வாதாரம் இல்லாத அவல நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் நிலைவரம் மிகவும் கவலைக்குரியதாகவே உள்ளது. அந்தப் பிரதேசங்கள் நேரடியாக யுத்தத்தின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு கிடந்தமை இதற்குக் காரணம். இந்த யதார்த்த நிலையைப் புரிந்துகொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதுடன், வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் முக்கிய கவனம் செலுத்தி வருவதாக யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தேவைகளை ஆராய்ந்து 3 மாத காலத்திற்குள் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக தாம் மூன்று மாதத்தில் மீண்டும் வடக்குக்கு வருவதாகவும் பிரதமர் உறுதியாகக் கூறியுள்ளார்.

"புதிய அரசியலமைப்பு மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முற்படுகையில் மஹிந்த அணியினர் நாட்டைப் பிளவுபடுத்தப் போவதாக பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை திசை திருப்பி வருகின்றனர். அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை எந்த யோசனையையும் அதற்காக முன்வைக்காத நிலையிலேயே அவர்கள் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன. அவர்களது காலத்தில் சர்வகட்சி மாநாட்டில் முன்வைத்த யோசனைகளுக்கு எதிராக இப்போது அவர்களே விமர்சித்து வருவது விந்தையாக உள்ளது" என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

"நாட்டைப் பிளவுபடுத்துவதென்றால், அதற்கு வழிவகுப்பவர்கள் அந்தத் தரப்பினரே, நாட்டைப் பிளவுபடுத்த நினைப்பவர்கள் அவருடன் சேரலாம். அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள அந்த அணியினர் அரசாங்கத்தினால் நாம் மக்களுக்குப் பெற்றுக்கொடுத்து வரும் ஜனநாயகத்திற்கும், சுதந்திரத்திற்கும், எதிராக செயற்பட்டு வருகின்றனர்.

வறட்சியினால் பாதிக்கப்பட்ட கிராமிய மக்கள் பெரும் துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர். விவசாய நடவடிக்கைகளுக்காக நுண்கடன்களைப் பெற்றுக் கடனை மீளச் செலுத்த முடியாத, நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். தமது நிலமைக்கு நுண்கடன் புதிய தீர்வைப் பெற்றுத்தரும் என சிந்தித்து செயற்பட்ட மக்கள் அதிக வட்டி காரணமாக கழுத்து நெரிக்கப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். அரசாங்கம் அவர்களை சுமையிலிருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் நான் நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அதற்காக 1,400 மில்லியன் ரூபாவை நிதியமைச்சர் மங்கள சமரவீர ஒதுக்கியுள்ளார்.

வறட்சி தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் எனப் பார்க்காமல் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பெரும்பாலும், பெண்களே கடன் சுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு சுமைகளைக் கொடுத்த அத்தகைய திட்டத்திற்கு பதிலாக, அவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் என்டபிறைஸ் ஸ்ரீலங்கா கடன்திட்டத்தை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். அக்கடனைப் பெற்றுக்கொள்வதில் வடக்கு மக்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்குமாக இருந்தால், அதனை அறியத்தரவும்.

நாட்டில் முன்னொரு போதும் இல்லாத வகையில், இந்தப் புதிய திட்டம் தற்போதைய அரசாங்கத்தினால், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வடக்கு மக்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வடக்கில் 5,000 ஏக்கரில் தெங்குப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கான திட்டம் ஒன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது. இதில் பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு அரிய சந்தர்ப்பம் வழங்கப்படும்.

வடக்கு மக்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. என்டபிறைஸ் ஸ்ரீலங்கா, கம்பெரலிய, “அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை” நிகழ்ச்சித்திட்டம், வீதிகள் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் பிரதிபலன்களை சில மாதங்களில் மக்கள் அனுபவிக்க முடியும்" என்று உறுதியளித்துள்ள பிரதமர், வடக்கு மக்களுக்குத் திறந்த மனத்துடன் ஓர் அழைப்பையும் விடுத்திருக்கிறார்.

"கடந்த கால நிகழ்வுகளை மறந்துவிட்டுப் பரஸ்பரம் மன்னித்துவிட்டுப் புதிய பண்பாட்டுடன் முன்னேறிச்செல்வோம்" என்று அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர். தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சிக்கு எதிராகப் பெரும்பான்மைக் கருப்பின மக்கள் கிளர்ந்தெழுந்ததால் உருவான பிரச்சினைக்குப் பின்னர், அங்கும் மன்னிப்பின் அடிப்படையில் சகவாழ்வு ஏற்படுத்தப்பட்டது. அதேபோல், உண்மைகளைக் கண்டறிந்து மன்னித்து மனிதர்களாக வாழ்வோம் என்கிறார் பிரதமர். உண்மையில், மனிதர்களால் மட்டுமே மன்னிக்க முடியும். நிறவெறியிலிருந்து மீட்சிபெற்ற தென்னாபிரிக்காவில் 1995இல் ஸ்தாபிக்கப்பட்ட உண்மை, நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் மூலம் நிலைமாற்று நீதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆணைக்குழுக்கள் இன்று உலக நாடுகள் பலவற்றுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றன.

போர்களுக்குப் பின்னர் பல நாடுகளில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தென்னாபிரிக்காவில் மாத்திரமே வெற்றியடைந்துள்ளது.

எனவே, தென்னாபிரிக்காவைப்போல் நாங்களும் வெற்றிபெற வேண்டும் என்பது பிரதமரின் அழைப்பு. இதனை அண்மைய அமைச்சரவையிலும்கூடப் பிரதமர் பிரேரித்திருக்கிறார். சகிப்புத்தன்மை சிறந்த எதிர்காலத்தைக் கொண்டு வரும். ஒருவருக் ெகாருவர் எதிர்த்து வழக்காடுவதன் மூலம் எதுவும் நடந்துவிடாது என்பதை தமிழர்கள் அறியாமல் இல்லை. ஆனால், கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எல்லா வாக்குறுதிகளுமே நம்பிக்ைகயீனத்தை ஏற்படுத்திவிட்டுள்ளன. ஆகவே, பிரதமரின் வாக்குறுதிகள் செயல்வடிவம் பெற வேண்டுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு.

2002இல் சமாதானத்தின் சிற்பி என்று தமிழ் மக்களால் புகழப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்த நம்பிக்ைகயை உறுதிப்படுத்தினால் எல்லா இனமும் இன்புற்று வாழும் என்பதில் சந்தேகமில்லை!

Comments