பேராதனையில் திடீரென தீப்பற்றி எரிந்த பயணிகள் பஸ் | தினகரன் வாரமஞ்சரி

பேராதனையில் திடீரென தீப்பற்றி எரிந்த பயணிகள் பஸ்

அக்குறணை குறூப் நிருபர்

கண்டி – கம்பளை பிரதான வீதியில் பேராதனை பல்கலைக்கழக அக்பர் விடுதி முன்பாக தனியார் பஸ்ஸொன்று நேற்று (13) திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இத் தீவிபத்து காரணமாக பஸ் முற்றாக சேதம் அடைந்துள்ளது. நேற்று சனிக்கிழமை மாலை பஸ்வண்டி கம்பளை நோக்கிப் பயணிக்கும் போதே திடீரெனத் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்திற்குத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவத்தின் போது எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. பஸ் வண்டியின் தொழில் நுட்பக் கோளாறை திருத்திக் கொண்டு சாரதியும் நடத்துனரும் பஸ் வண்டியில் சென்ற வேளையே இவ்வாறு தீப்பற்றியுள்ளது. இருவரும் வெளியே பாய்ந்து தப்பித்துள்ளதாகப் பொலீசார் தெரிவித்தனர். பேராதனைப் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Comments