நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை | தினகரன் வாரமஞ்சரி

நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை

டெல்லியில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாத் அரும்பொருட்காட்சியகத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை வைத்து கௌரவிக்கப்பட்டுள்ளது.

பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன். இவர் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் 'வீரமாதேவி' என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். ஒரு சில இந்தி படங்களிலும் நடிக்கிறார்.

இவரது வாழ்க்கை கதை இணைய தொடராக தயாராகி உள்ளது. சன்னிலியோன் இந்தி படங்களில் நடிப்பதற்கு அங்குள்ள கவர்ச்சி நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சன்னிலியோனுக்கு மெழுகு சிலை தயாராகி உள்ளது. டெல்லியில் உள்ள மேடம் துஷாத் மியூசியத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. அங்கு அமிதாப்பச்சன், ஸ்ரீதேவி உட்பட முன்னணி நடிகர், நடிகைகளுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளன. தனது மெழுகு சிலையை சன்னிலியோன் திறந்து வைத்து அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதுகுறித்து சன்னிலியோன் கூறும்போது, ‘‘எனக்கு மெழுகு சிலை வைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த சிலையை பார்த்ததும் வியப்பு ஏற்பட்டது. இந்த சிலையை நேர்த்தியாகவும் சிறப்பாகவும் உருவாக்க நிறைய பேர் பல நாட்கள் உழைத்து உள்ளனர். அவர்களை நான் பாராட்டுகிறேன். எனக்கு மகிழ்ச்சியான உணர்வை இந்த சிலை ஏற்படுத்தி உள்ளது.

 

இதை கௌரவமாக கருதுகிறேன்’’ என்றார்.

Comments