கல்சியத்தின் செழுமை நிரம்பிய NESTLÉ a+™ முழு ஆடை UHT பால் சந்தையில் அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

கல்சியத்தின் செழுமை நிரம்பிய NESTLÉ a+™ முழு ஆடை UHT பால் சந்தையில் அறிமுகம்

திரவ பாலுக்கு அதிகரித்து வரும் கேள்வியை ஈடுசெய்யும் வகையில், 20,000 வரையான இலங்கை பாற்பண்ணையாளர்களிடமிருந்து சேகரிக்கப்படும் உயர்தர தூய பாலைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது

புத்தம் புதிதாக அறிமுகமாகியுள்ள NESTL a+முழு ஆடை UHT பால் தற்போது நுகர்வோருக்கு சுவை விருந்தாக அமைந்துள்ளது. பாலோடு மற்றும் அற்புத சுவை கொண்ட NESTLa+ அண்ணளவாக 20,000 வரையான இலங்கை பாற்பண்ணையாளர்களிடமிருந்து பெறப்படும் மிகச் சிறந்த பாலைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது.

நெஸ்லே நிறுவனம் பாலுற்பத்தித் துறையில் 150 வருடங்களுக்கும் மேலாகக் கொண்டுள்ள நிபுணத்துவ அனுபவத்தின் அனுகூலத்துடன் கிடைக்கின்ற உயர் தரம் கொண்ட இந்த உற்பத்தி, ஊட்டச்சத்தின் செழுமை, செழுமையான பாலேடு சுவை மற்றும் சௌகரியம் ஆகிய அனைத்தையும் ஒரு சேர வழங்குகின்றது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாலுக்கு அதிகரித்த கேள்வியைத் தோற்றுவித்து, உள்நாட்டு பாற்பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்திற்கு நன்மையளிப்பதையும் NESTL a+ இனை கொள்வனவு செய்வதன் மூலமாக நுகர்வோர் உத்தரவாதப்படுத்திக் கொள்ள முடியும்.

பாலில் இயற்கையாகவே கல்சியத்தின் செழுமை நிறைந்துள்ளதுடன், ஏனைய பல முக்கியமான ஊட்டச்சத்துக்களையும் அது கொண்டுள்ளது.

என்புகள், சருமம் மற்றும் பற்களை ஆரோக்கியமாகப் பேணுவதற்கு கல்சியத்தை வழங்கும் மிகச் சிறந்த ஒரு மூலமாக இது கருதப்படுவதுடன், கல்சியத்தின் செழுமை நிரம்பிய வேறு உணவை விடவும் அனேகமான சிறுவர்களை இது பெருமளவு ஈர்ப்பதால், பெற்றோர் மத்தியில் மிகவும் பிரபலமான தெரிவாகவும் காணப்படுகின்றது. வளரும் பருவத்தில் பாலை அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளை வளர்ந்த பின்னர் அனுபவிக்க முடியும் என்பது திரவ பாலுக்கான கேள்வியை அதிகரிக்கச் செய்துள்ளது.

நுகர்வோர் சௌகரியத்தை நாடுவதும், குறிப்பாக சிறுவர் மத்தியில் திரவ பாலின் நுகர்வினை ஊக்குவிக்கும் முயற்சிகளை இலங்கை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருவதுமே கேள்வி அதிகரிப்பிற்கான காரணங்களாகும்.

ஒப்பீட்டளவில் குறைந்த அளவு மட்டத்திலான பால் வழங்கலுடன், இலங்கையின் பாலுற்பத்தித் தொழிற்துறை வளர்ச்சியடைந்து வரும் ஒன்றாகவே காணப்படுகின்றது.

Comments