பழங்களில் ஏன் ஸ்டிக்கர்கள்? | தினகரன் வாரமஞ்சரி

பழங்களில் ஏன் ஸ்டிக்கர்கள்?

விழிப்புணர்வு கொண்ட பாவனையாளர்கள் தமது உணவுப் பொருட்கள் மீது ஒட்டப்பட்டுள்ள விபரச் சீட்டுக்களை (Lables) வாசித்தே அவற்றைக் ெகாள்வனவு செய்வர். அநேகமான உணவு வகைகளைக் கொண்ட பெட்டிகள் நீங்கள் கொள்வனவு செய்பவற்றை உங்களுக்குச் சரியாகவே சொல்லி விடுகின்றன. பழங்களைப் பொறுத்த விடயத்தில், நாம் அடிக்கடி மனக் குழப்பமடைய நேரிடுகின்றது. இந்தப் பழங்கள் அனைத்திலும் இலக்கங்கள் கொண்ட சிறிய ஒட்டி (Sticker)யொன்று காணப்படும்.

அதிர்ஷ்டவசமாக, இத்தகைய இலக்கங்கள் கொண்ட ஒட்டிகள் (Sticker) பாவனையாளர்களுக்குப் பயனுள்ள தகவல்களை வழங்குவதுடன் குறித்த பழம் மரபுரீதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உங்களுக்கு கூறிவிடுகின்றது.

குறித்த பழம் சேதன, முறையிலா அல்லது பாரம்பரிய முறைகளைப் பாவித்தா உருவாக்கப்பட்டதென்பதை குறித்த ஒட்டியானது தெளிவுபடுத்துகின்றது.

4 தொடக்கம் 5 வரையான சிற்றிலக்கங்களைக் கொண்டுள்ள இத்தகைய ஒட்டிகள் (Sticker) பெரியளவிலான உற்பத்திப் பொருட்களை அடையாளங் காண்பதற்கும் பொருட்பட்டியல் கட்டுப்பாட்டை (Inventory Control) சுலபமாக கையாள்வதற்குமென சிறப்பங்காடிகளில் (Super Markets) தொண்ணூறுகளின் முற்பகுதியில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. விலைக் குறியீடாக அறிந்துள்ளவாறு, அவர்கள் உற்பத்திப் பொருட்களை, வியாபாரப் பொருள் அதன் வகை மற்றும் வளர்ப்பு முறையியல உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அடையாளம் காண்கின்றனர்.

இத்தகைய குறியீடுகள் உலகம் பூராவுமுள்ள உற்பத்திச் சங்கங்களுக்கு உற்பத்தி நியமங்களுக்கான சர்வதேச ஒன்றியத்தினாலேயே (International Fedration for Produce Standeras- IFPS) வழங்கப்படுகின்றன. எவ்வாறிருப்பினும் இந்தக் குறியீட்டு முறைமையானது தன்னார்வத் தன்மையுள்ளதாக இருப்பதுடன் ஆளும் அமைப்பு எதனாலும் கடமையாக்கப்பட்டிருக்கவில்லை.

விற்பனை செய்யப்பட்டுவரும் பழங்களின் வகைகளைப் பார்த்து இத்தகைய இரகசியக் குறியீடுகளை தம்மால் கண்டுகொள்ள முடியுமா என்பதை அறிந்துகொள்ள கொழும்பில் உள்ள சிறப்பங்காடிகள் பலவற்றுக்கு விஜயம் செய்தனர். நியூஸிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Fuji அப்பிள் பழங்கள் மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதியாகும் Mandarins போன்ற ஒருசில பழவர்க்கங்கள் மட்டுமே 3000- 4999 குறியீட்டு இலக்கங்களுடனான விபரச் சிட்டுக்களில் காட்சியளித்தன. மாதுளம்பழங்கள் மற்றும் வாழைப்பழங்கள் தத்தமது வர்த்தக நாமங்களுடன் ஒட்டிகளை ((Sticker)) மட்டும் கொண்டிருந்தன.

இது குறித்து பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கச் செயலாளரான பீ. எம். எம். பாலசூரிய கருத்து வெளியிடுகையில், தெற்காசிய நாடுகளில் இது குறைவாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற போதிலும் கூட, ஜரோப்பிய நாடுகள் பலவற்றிலும் அமெரிக்காவிலும் உள்ள சில்லறை வியாபாரிகள் விபரச்சீட்டு முறைமைக்கு (Labelling System) கட்டுப்பட்டு நடக்கவேண்டியது அவசியமாகும். இறக்குமதி செய்யப்படும் பழ வர்க்கங்களுடன் ஒப்பிடுகையில், உள்நாட்டில் உற்பத்தியாகும் பழங்களில் இரசாயன சேர்க்கை குறைவாகவே காணப்படுகின்றதென தெரிவித்தார்.

சந்தையில் அதிகளவு இரசாயன சேர்க்கையுள்ள இறக்குமதி செய்யப்பட்ட பழ வகைகளில், தோடம் பழங்கள், பச்சை அப்பிள்கள், சிவப்பு நிற அப்பிள், கிவி பழம், பெயர்ஸ் மற்றும் பீச் பழம் ஆகியவை காணப்படுவதாக பாலசூரிய மேலும் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேல் கருத்து வெளியிடுகையில்,

உள்ளூர் சில்லறை வர்த்தகர்கள், இறக்குமதி செய்யப்பட்ட மாம்பழங்கள் மற்றும் வாழைப்பழங்கள் ஆகியவற்றை அண்மைக்காலமாக விற்பனை செய்துவரும் போக்கை நாம் அவதானித்துள்ளோம். சாதாரண மாம்பழமொன்று அன்னளவாக 250 கிராம் எடைகொண்டதாக விளங்கும். அதேவேளை, இத்தகைய GM மாம்பழங்கள் சுமார் 500 கிராம் நிலை கொண்டவையாகவுள்ளன எனவும் குறிப்பிட்டார்.

மிருதுவான அடையாள முத்திரையை வாசித்தல்

நீங்கள் கொள்வனவு செய்த பழம் எவ்வாறு வளர்க்கப்பட்டதென்பதை அடையாளங்கண்டு கொள்வதற்கு விலைக் குறியீடு சாதாரண திறவுகோலாக உள்ள போதிலும் கூட, மிருதுவான அடையாள முத்திரை வாசிப்பானது நீங்கள் வழமையாக சாப்பிடும் ஆகாரம் பற்றி தீர்மானதோர் தீர்மானமொன்றை எடுப்பதற்கான வாய்ப்பொன்றை உங்களுக்கு வழங்கும். குறித்த விலைக்குறியீட்டில் 3 மற்றும் 4 உடன் ஆரம்பமாகும் நான்கு இலக்கங்கள் மட்டுமே இருப்பின், குறித்த உற்பத்தியானது கிருமிநாசினிகள் பாவனையுடன் மரபுமுறை அல்லது பாரம்பரிய முறையில் வளர்க்கப்பட்டதென்பதே இதன் அர்ததமாகும். அதாவது 3000 -4999.

மரபு முறை வளர்ப்பதென்பது, செயற்கையான இரசாயன உரவகைகள், கிருமிநாசினிகள் மற்றும் ஏனைய உள்ளீடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வேளாண்மை முறைகளைக் குறிக்கும் விவசாய சொற்பதமாகும்.

விலைக் குறியீட்டில் இலக்கம் 8 இல் ஆரம்பமாகும் 5 இலக்கங்கள் காணப்படின், குறித்த உற்பத்தியானது மரபு அல்லது மரபற்றது என்பதை உங்களுக்கு சொல்லி விடுகின்றது. எவ்வாறிருப்பினும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பாலசூரிய தெளிவுபடித்தியவாறு, இலக்கம் ‘8’ ஐ ஆரம்பமாகக் கொண்ட குறியீட்டிலக்கம் (அதாவது 83000- 849999) மரபுசார்ந்த வகையில் மாற்றியமைக்கப்பட்ட உற்பத்திகளை அடையாளங் காண்பதற்கென இதற்கு முன்னர் ஒதுக்கப்பட்டிருந்தது. இது சில்லறை வியாபாரிகளால் அருமையாகவே பாவிக்கப்படுகினறது.

ஆகையால், உற்பத்தி நியமனங்களுக்கான சர்வதேச ஒன்றியம் இத்தகைய மரபுசார்ந்த வகையில் வளர்க்கப்படும் உற்பத்திகளுக்கென 83000 தொடரிலக்கத்தை தற்போது ஒதுக்கியுள்ளது. அதேவேளையில், சேதன முறையிலான உற்பத்திகளுக்கு 84000 தொடக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இலக்கம் ‘9’ இல் தொடங்கும் ஐந்து இலக்கங்கள் காணப்படின், குறித்த உற்பத்தியானது சேதன முறையில் உற்பத்தி செய்யப்பட்டதென்பது உங்களுக்கு சொல்லிவிடுகின்றது. உதாரணமாக, சேதனமுறையில் உற்பத்தியான வாழைப்பழத்திற்கான குறியீட்டிலக்கம் 94011 ஆகவே இருக்கும்.

புறக்கோட்டையில் பழ வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் சில்லறை வர்த்தகர்களையும் பாவனையாளர்களையும் இது குறித்து அவர்கள் சந்தித்து உரையாடினர்.

கிராண்ட்பாஸைச் சேர்ந்த இராஜேந்திரன் புறக்கோட்டையில் உள்ள பழக்கடையொன்றில் பணியாற்றி வருகின்றார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில், இந்தப் பழக்கடையின் உரிமையாளர் புறக்கோட்டையில் 40 வருடங்களுக்கு மேலாக பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். சுனில் ட்ரேடர்ஸ், நவகிரி ஃபிரெஷ் புரூட்ஸ் போன்ற வழங்குநர்களிடமிருந்து பழங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றன.

பழங்களின் போஷாக்குப் பெறுமதி பற்றிய அறிவு உங்களுக்கு உள்ளதாக என அவரிடம் கேட்டபோது தனக்கு அது பற்றி அதிகம் தெரியாதெனவும் தான் சாதாரண விற்பனையாளர் ஒருவரே எனவும் அவர் கூறினார். பழ விற்பனையைத் தவிர தனக்கு வேறு எதுவும் தெரியாதெனவும், வியாபாரம் களை கட்டும் ‘நேரங்களில்’ பஸ் மற்றும் புகையிரதப் பயணிகள் பழங்களை அதிகம் வாங்குவதன் மூலம் தங்களுக்கு சுமார் 50,000 ரூபா வரை இலாபம் கிடைத்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாவனையாளரான பதுளையைச் சேர்ந்த நிரோஷாவிடம் அவர் வாங்கிச் சாப்பிட்டு வரும் பழங்களின் போஷாக்குத் தரம் பற்றிக் கேட்டபோது, தான் இதுபற்றிக் கவனிப்பதே இல்லையென தெரிவித்தார். அவர் விலைக் குறியீட்டிலக்கம் பொறிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட திராட்சைப் பழப் பெட்டியொன்றை வைத்திருந்தார். “எமக்கு இதைப்பற்றி ஒன்றுமே தெரியாததால் விசாரித்தறிவதில் ஆர்வங்காட்டுவதில்லையெனத் தெரிவித்தார்.

முன்னாள் உணவு மற்றும் விவசாய ஸ்தாபன நிபுணர்

உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தில் சேதன முறை வேளாண்மையில் நீண்டகால அனுபவம் கொண்ட நிபுணரொருவர், GM உணவுகள் பற்றி பாவனையாளர்களுக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார். அவர் இது பற்றித் தெரிவிக்கையில்,

“கம்பனிகளால் அதிகாரமளிக்கப்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் போன்ற விஞ்ஞான தகவல் வழங்குநர்கள் பலர் இது குறித்த தகவல்களை வழங்கி வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள மக்களில் 65 சதவீதமானோர் நீரிழிவு நோயாளிகளாகவுள்ளனர். தற்போது சுயாதீனக் குழுக்கள் ​இணையதளத்தில் தமது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றன. GM உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் அபாயம் குறித்தும், இரசாயன சேர்க்கையுள்ள உணவுகளால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

GM உணவுகளை உட்கொள்வதனால் மலட்டுத் தன்மை ஏற்படலாமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில வருடங்களுக்கு முன்னர், ஹவாயில் இயற்கையான பப்பாளிப் பழக்கன்றுகள் முழுமையாக வைரஸ் தாக்கத்தால் அழிக்கப்பட்டது.

இலங்கையிலும் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட பப்பாளி மரக் கன்றுகள் மிக விரைவில் அழிந்துவிடும் அபாயமுள்ளது. ஆயினும் ‘ரெட் லேடி’ பப்பாளி இனம் மட்டும் தப்பிப் பிழைக்க வாய்ப்புள்ளது என்றார்.

 இரா. இராஜேஸ்வரன்

Comments