குழந்தைகள் | தினகரன் வாரமஞ்சரி

குழந்தைகள்

வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையே தேசிய ஒற்றுமை, சகவாழ்வு, சமூக நல்லிணக்கம் என்பவற்றை விரிவுபடுத்தும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட ஐந்து நாள் செயலமர்வு கண்டி, குருதெனியாவிலுள்ள கல்வி வள மேம்பாட்டு நிலையத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வுக்கு ஒரு மாகாணத்திலிருந்து 60 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதன் இறுதிநாள் நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எக்கநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களது ஆக்கங்களைப் பார்வையிடுவதையும், பங்கு கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதை யும் படங்களில் காணலாம்.

(படங்கள் : அக்குறணை குறூப் நிருபர்)

 

Comments