பிரபாஸுக்காக பாலிவுட் வாய்ப்பை கைவிட்ட அனுஷ்கா! | தினகரன் வாரமஞ்சரி

பிரபாஸுக்காக பாலிவுட் வாய்ப்பை கைவிட்ட அனுஷ்கா!

அனுஷ்கா கோவில் கோவிலாக ஏறி, இறங்குவதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அனுஷ்காவுக்கு வயது ஏறிக் கொண்டே போவதால் அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் விரும்புகிறார்கள்.

அவர்களும் ஆண்டுக் கணக்கில் மாப்பிள்ளை தேடியும் எதுவும் அமையாமல் உள்ளது. இந்த காரணத்தால் அவரது பெற்றோர் கவலையில் உள்ளனர்.

அனுஷ்காவுக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாலேயே அவருக்கு திருமணம் கைகூடி வரவில்லையாம். தோஷம் கழிக்க அவர் கோவில் கோவிலாக சென்று வருவதாக தெலுங்கு திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள்.

பிரபாஸ் ரசிகர்களோ அனுஷ்கா பாகுபலி புகழ் பிரபாஸை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். உங்களின் ஜோடி சூப்பர் தயவு செய்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கெஞ்சுகிறார்கள். பிரபாஸுக்கு இந்த ஆண்டே திருமணம் நடக்கும் என்று அவரின் வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பெண் தேடும் படலம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அனுஷ்காவும் பெற்றோர் பார்க்கும் பையனை திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளார். திருமணம் செய்ய ஏதுவாக அவர் புதுப்படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை. சாஹோ படத்தை அடுத்து பிரபாஸ் பாலிவுட் பக்கம் செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது. சாஹோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

Comments