15 ஆம் திகதிவரை கடும் கடல் சீற்றம் | தினகரன் வாரமஞ்சரி

15 ஆம் திகதிவரை கடும் கடல் சீற்றம்

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோர பிரதேசங்களில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கடல் அலையில் சீற்றம் சற்று அதிகமாக இருப்பதுடன் கரையோர பிரதேசங்களில் கடல் அலைகள் 2 முதல் 2.5 மீற்றர் வரையான உயரத்திற்கு எழலாம் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாடு முழுவதும் மாலை வேளைகளில் அதாவது 2.00 மணிக்குப் பின்னர் மழை கடுமையாகப் பெய்யும் நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் குருணாகல் மாவட்டங்களின் சில பிரதேசங்களிலும் 75 மில்லி மீற்றரளவு மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்றும் அந்தத் திணைக்களம் கூறியுள்ளது.

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும், அதன்போது காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை எதிர்வரும் 15ஆம் திகதி வரை காணப்படலாம் என்றும் வளிமண்டவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Comments