நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு ரெமோ படத்திற்கு பிறகு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது விக்ரமுடன் 'சாமி 2' படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், பவன் கல்யாணுடன் ஒரு படம், சண்டகோழி 2 படத்தில் நடித்துள்ளார். பிசியான நடிகையான இவர் பல படங்களை தவிர்த்து வருகிறார்.
இதற்கான காரணத்தை அவரே கூறியுள்ளார். அவசரம், அவசரமாக படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.நிதானமாக வளரவேண்டும் என நினைக்கிறேன்.
அப்பா, அம்மா, பாட்டி என எல்லோரும் இப்போது நடித்துக்கொண்டு வருகிறார்கள். அக்காவும் நிமிர் படத்துல ஒர்க் பண்றாங்க. குடும்பமே சினிமால இருக்காங்க.