அம்மா அப்பா சொல் கேட்டு
உன் கரம் பிடித்தேன்
இரவு ஒன்றாய்
இரண்டு உயிர் ஒன்றாக
இணைந்து விட்டோம்
முன்பின் அறிமுகமில்லை
உயிரொன்று வெளிவந்து
கொள்ளை இன்பம் தருகிறது
பிள்ளைக் கனியமுதாய்
அம்மி மிதிக்காமல்
அருந்ததியும் திருமணமும்
இருமனம் கலந்து ஒரு ----------------
நிறைவுற்றது
வாழ்க்கை என்பது வெறும்
சம்பிரதாயம் மட்டுமல்ல
வாழ்ந்து காட்டி வெற்றிக் கொடி
கம்பத்தை ஊன்றிட்டோம்
ஒன்று பட்டோம்
வாழ்ந்து விட்டோம்
என்னதான் போராட்டம்
வந்தாலும் முகங் கொடுத்து
இதுதான் சாதாரண
வாழ்வு என்றால்
வாழுவது தான்