வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் வடசென்னை. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே நின்றது.
வெற்றிமாறன் விசாரணை ஆஸ்கருக்கு தேர்வு ஆனதால், அந்த வேலைகளில் பிஸியாகவிருந்தார். தற்போது இப்படம் மீண்டும் தொடங்க, ஏற்கனவே விஜய் சேதுபதி அப்படத்திலிருந்து விலகினார்.
தற்போது நடிகை அமலா பாலும் இந்த படத்திலிருந்து விலகியுள்ளதாக கூறப்படுகின்றது, ஏனெனில் அவர் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கமிட் ஆகியுள்ளதால் இப்படத்திற்கு கால்ஷிட் ஒதுக்க முடியவில்லையாம்.