ஈரெட்டு இளமெட்டு தாலாட்டுது
இடைகண்டு விழிவண்டு தேரோட்டுது
பருவத்தில் நறுமொட்டு கமழ்கின்றது
பாசம்தான் நாணத்தில் தாழிட்டது
செம்மரக் கன்னமோ சிவப்பேறுது
சிரித்தாலே இதயத்தில் சிலிர்ப்பேறுது
இதயம் தான் இமையிரண்டும் துடிக்கின்றது
எண்ணமோ ஏதேதோ வடிக்கின்றது
புரிசங்குக் கழுத்தாரம் நகைக்கின்றது
புரியாத இதழிரண்டும் பழுக்கின்றது
கருங்கூந்தல் முகிலாக அவிழ்கின்றது
கணையாழி விரல்கோதி அளைகின்றது