நாளை ஐ.பி.எல். ஏலம்! | தினகரன் வாரமஞ்சரி

நாளை ஐ.பி.எல். ஏலம்!

எதிர்வரும் ஏப்ரல் 10 முதல் மே 20 வரை நடைபெறவுள்ள 10வது இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் வீரர்களைத் தெரிவு செய்யவதற்கான ஏலம் விடும் நிகழ்வு நாளை பெங்களூரில் நடைபெறவுள்ளது. 

10வது ஐ. பி. எல். டுவெண்டி/20 தொடருக்காக 799 வீரர்கள் விண்ணப்பத்திருந்தனர். இதில் ஐ. பி. எல். லில் குதிக்கும் 8 அணிகளுக்காக 351 வீரர்களை ஏலத்தில் எடுப்பதற்கு ஏற்பாடாகியுள்ளன. இதில் 122 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். 

இறுதிப் போட்டி  இடம் மாறுமா? 
எப்போதும் சர்ச்சையினாலும், தீவிரவாதத் தாக்குதலினாலும் அவதிப்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கடந்த வாரம் ஆரம்பமான பி. எஸ். எல். தொடரின் இறுதிப் போட்டியை லாஹூர் கடாபி மைதானத்தில் நடத்த பல இழுபறிகளுக்கு மத்தியில் முடிவு செய்திருந்தது.

ஆனால் கடந்த புதன்கிழமை லாகூர் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பினால் பி. எஸ். எல். தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் அங்கு சென்று விளையாட அச்சம் தெரிவிக்கலாம் என்ற காரணத்தினால் இறுதிப் போட்டியை ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே நடாத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.    

Comments